• Download mobile app
21 Apr 2025, MondayEdition - 3358
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை திமுக மகளிரணியினர் மாநகர் காவல் ஆணையரிடம் புகார்

August 24, 2023 தண்டோரா குழு

கோவை திமுக மகளிரணியினர் மாநகர் காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.

மதுரை அதிமுக மாநாட்டில் தமிழக முதல்வர், அமைச்சர் உதயநிதி, திமுக எம்.பி. கனிமொழி மற்றும் ராசா குறித்து அவதூறாக பாடல் பாடியவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்து கோவை திமுக மகளிரணியினர் மாநகர் காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.

கடந்த 20 ஆம் தேதி மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி க்கள் கனிமொழி மற்றும் ராசா குறித்தும் அவதூறான பாடிய பாடல் விவகாரத்திற்கு கடும் கன்டணங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் திமுக மகளிரணி சார்பில் அருவறுக்கத்தக்க வகையில் பாடல் பாடியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் கண்காணிப்பாளர், ஆணையரிடம் புகார் அளித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மகளிரணி சார்பில் மாநகர ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். மேலும் பெண் தலைமை தாங்கிய அதிமுக கட்சியினர் பெண் எம்.பி குறித்து மிகவும் அருவறுக்கத்தக்க பாடலை பாடியுள்ளனர். அதனை முன்னாள் முதல்வர் பார்த்து ரசிப்பது மோசமான செயல் என தெரிவித்தனர்.

மேலும் படிக்க