• Download mobile app
22 Apr 2025, TuesdayEdition - 3359
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு மதுரையில் தடை

January 19, 2017 தண்டோரா குழு

மதுரை மாநகரில் வரும் பிப்ரவரி 3ஆம் தேதி வரை 15 நாட்களுக்குப் பொது இடங்களில் ஊர்வலமோ, ஆர்ப்பாட்டமோ நடத்த மதுரை காவல்துறை தடை விதித்துள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நான்காவது நாளாகப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அலங்காநல்லூர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மதுரை தமுக்கம் மைதானம், கோரிப்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மதுரை ரயில் நிலையத்திற்குள் புதன்கிழமை புகுந்த மாணவர்கள், தண்டவாளத்தில் அமர்த்து போராடி வருகின்றனர். ரயிலையும் மறித்து இளைஞர்கள், மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மதுரை முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இதனிடையே மதுரை மாநகரில் வரும் பிப்ரவரி 3ஆம் தேதி வரை 15 நாட்களுக்குப் பொது இடங்களில் ஊர்வலமோ, ஆர்ப்பாட்டமோ நடத்த மதுரை காவல்துறை தடை விதித்துள்ளது.

ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்த வேண்டுமெனில் 5 நாட்களுக்கு முன், அனுமதி பெற வேண்டும் என மதுரை மாநகர காவல் ஆணையர் கூறியுள்ளார். தடையை மீறி ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க