• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை கரும்புகடையில் முதல் முறையாக புத்தகத் திருவிழா

March 2, 2024 தண்டோரா குழு

கோவை கரும்புகடையில் முதல் முறையாக புத்தகத் திருவிழா மார்ச் 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் கரும்புகடை ஹிதாயா கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

இதன் துவக்க விழாவில் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்து மாநில தலைவர் மௌலவி முஹம்மத் ஹனிபா மன்பயீ மற்றும் மாநில துணைத்தலைவர் ஜலாலுதீன்,மாநில அமைப்பு செயலாளர் ஜலாலுதீன்,இஸ்லாமிக் எஜுகேஷனல் டிரஸ்ட் பொதுச்செயலாளர் சபீர் அஹமத், மனிதவள மேம்பாட்டு துறைச் செயலாளர் முகமது இஸ்மாயில் ஆகியோர சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தக கண்காட்சியினை துவக்கி வைத்தனர். புத்தகத்தின் முதல் விற்பனையை கரும்புகடை சம்சுல் இஸ்லாம் பள்ளியின் நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.

கோவை கரும்புகடையில் ஜமாத் இஸ்லாமி ஹிந்து சார்பில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் குர்ஆன்,குர்ஆன் மொழிபெயர்ப்பு,நபி மொழிகள், இறைத்தூதர் வரலாறு,சிறுவர்களுக்கான குர்ஆன் வரலாறுகள்,அறிவு சார்ந்த புத்தகங்கள்,பெண்களுக்கான உரிமைகள், கடமைகள்,வழிகாட்டுதல் புத்தகம் மற்றும் பொது அறிவு புத்தகங்கள் என ஒரு லட்சத்திற்கும் மேலான புத்தகங்கள் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் 10 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை புத்தகங்கள் சிறப்பு தள்ளுபடியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிகழ்வை,கோவை மாவட்ட தலைவர் உமர் பாரூக், சபீர் அலி, பீர்முகமது, அப்துல் ஹக்கீம் ஆகியோர் புத்தக விழாவினை ஒருங்கிணைத்தினர்.

மேலும் படிக்க