• Download mobile app
22 Apr 2025, TuesdayEdition - 3359
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பீட்டாவுக்கு எதிராக வழக்கு

January 24, 2017 தண்டோரா குழு

பீட்டா அமைப்புக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தொடங்கியதிலிருந்தே, ஜல்லிக்கட்டுக்கு எதிராக உள்ள பீட்டா அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில், தமிழகத்தில் பீட்டா அமைப்பினைத் தடை செய்ய வேண்டும் என்று சூரியப்பிரகாசம் என்ற வழக்குரைஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அத்துடன் இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.ஆனால், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று கூறிய நீதிபதி வழக்காகத் தொடர்ந்தால் புதன்கிழமை விசாரிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

பீட்டா அமைப்பைச் சேர்ந்த ராதா ராஜன், மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் தமிழ்ப் பண்பாட்டுக்கு எதிராகப் பேசி வருவதால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது மனுவில் சூரியப் பிரகாசம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க