• Download mobile app
22 Oct 2024, TuesdayEdition - 3177
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள் இட ஓதுக்கீடு செல்லும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை தமிழ் புலிகள் வரவேற்பு

August 2, 2024 தண்டோரா குழு

அருந்ததியர்களுக்கு வழங்கப்பட்ட 3 சதவீதஉள்ளிட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தமிழ் புலிகள் கட்சி வரவேற்கிறது.

இது குறித்து தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் பொதுச் செயலாளர் இளவேனில் நிர்வாகிகள் தம்பி செந்தில் சந்திரன் ஆகியோர் கூறியதாவது:-

2009 ஆம் ஆண்டு டாக்டர் கலைஞர் தலைமையிலான திமுக அரசு வழங்கிய 3% உள்இட ஒதுக்கீடு சட்டத்திற்கு எந்த தடையுமில்லை.என்று உச்ச நீதிமன்றம்வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி உள்ளது.இந்த வழக்கில் தமிழ்ப்புலிகள் கட்சி தன்னையும் இணைத்துக் கொண்டு வழக்கறிஞர்களை நியமித்து வழக்காடினோம்.

அதன்படி இந்த உள் இட ஒதுக்கீடு கோரிக்கைக்கு வலு சோக்கும் விதமாக துணை நின்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், சட்ட மன்றத்தில் தொடாந்து குரல் கொடுத்த மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹீருல்லா அவர்களுக்கும்.இந்த வழக்கில் சிறப்பாக வாதாடிய வழக்கறிஞர்களுக்கும், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக்கழகம்,திராவிடர்கழகம் மற்றும் அனைத்து ஜனநாயக தோழமை சக்திகளுக்கும் தமிழ்ப்புலிகள் கட்சி தனது நன்றியை தெரிவித்துக்
கொள்கிறது.

மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் படிக்க