• Download mobile app
22 Oct 2024, TuesdayEdition - 3177
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஹிதாயா பெண்கள் இஸ்லாமியக் கல்லூரி மாணவிகள் நடத்தும் ஹிஜ்ரத் கண்காட்சி

August 2, 2024 தண்டோரா குழு

இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வான ஹிஜ்ரத் குறித்தும், அந்நிகழ்வு நமது வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பது குறித்தும் மாடல்கள் மூலம் எளிமையாக விளக்கிட ஹிதாயா இஸ்லாமியக் கல்லூரி மாணவிகள் கண்காட்சி நடத்துகின்றனர்.

இக்கண்காட்சி மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. ஆகஸ்ட் 1, 2 ஆகிய இரண்டு நாட்களுக்கு பள்ளி, கல்லூரி மாணவிகளுக்காகவும், ஆகஸ்ட் 3 ஆம் தேதி பெண்களுக்காகவும் நடைபெறுகிறது.

இக்கண்காட்சியின் துவக்க விழாவுகு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை பெருநகரத் தலைவர் P.S. உமர் ஃபாரூக் தலைமை வகித்தார்.ஹிதாயா கல்லூரி முதல்வர் ஆலிமா. ஜீனத்தில் பௌஸ் MA., வரவேற்றார்.

தொடர்ந்து கண்காட்சியை மதுக்கரை முஸ்லிம் காலணி பள்ளிவாசல் தலைவர் M. ஷௌக்கத் அலி திறந்து வைத்தார்கள். தொடர்ந்து லைஃப்ஜோன் கிளினிக் தலைமை மருத்துவர் Dr.பாத்திமுத்து நூரானியா,அரஃபா ஸ்டோர்ஸ் உரிமையாளர் ஹாசிம் சாஹிப்,அஸ்ரப் சாஹிப், இன்ஜினியர் சிக்கந்தர் பாட்சா ஆகியோர் அரங்குகளை திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை பெருநகர பெண்கள் அணி செயலாளர் ஜஹீனா, ஜமாஅத் ஊழியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

தொடர்ந்து கல்லூரி மாணவிகள் ஹிஜ்ரத் கண்காட்சியை அழகுற எடுத்துரைத்தார்கள். பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் கண்காட்சிக்கு வருகை தந்து கண்காட்சியைப் பார்த்து பயன்பெற்றார்கள்.

மேலும் படிக்க