• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியாவை உலகளவில் உயர்த்துவோம்:தேசியப் பங்குச்சந்தை நிர்வாக இயக்குனர் ஆசிஷ்குமார் சவுகான் சுதந்திர தின வாழ்த்து

August 17, 2024 தண்டோரா குழு

78வது சுதந்திர தினத்தையொட்டி தேசியப் பங்குச்சந்தை நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான ஆசிஷ்குமார் சவுகான் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தையொட்டி, ஒரு முற்போக்கான மற்றும் வளமான நாட்டை உருவாக்க பாடுபட்ட நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை இந்நாளில் போற்றி வணங்குவோம். உலக அளவில் இந்தியாவை பொருளாதாரத்தில் முன்னணி நாடாக உருவாக்க இந்நாளில் நாம் சபதம் ஏற்போம்.

வலுவான கட்டமைப்பு கொண்ட தேசமாக இந்தியாவை உருவாக்குவோம். நமது தேசத்தை உயர்த்துவதற்கான அதன் தொடர்ச்சியான முயற்சிகளில் முதலீட்டாளர் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பிற்காக தேசியப் பங்குச்சந்தை தொடர்ந்து மூலதனச் சந்தையில் சிறப்பான கவனம் செலுத்தி வருகிறது. அனைவருக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க