• Download mobile app
22 Oct 2024, TuesdayEdition - 3177
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் முதல் முறையாக நடைபெற்ற ரோபோடிக் அறுவை சிகிச்சை குறித்த பயிலரங்கம்

August 26, 2024 தண்டோரா குழு

கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவமனையில் பி.எஸ்.ஜி
ரோபோகான் 2024 எனும் தலைப்பில் கோவையில் முதல் முறையாக,ரோபோடிக் அறுவை சிகிச்சை குறித்த பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கு 2 நாட்கள் பி.எஸ்.ஜி மருத்துவமனை அரங்கத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பி.எஸ்.ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ஜே.எஸ் புவனேஸ்வரன்,பி.எஸ்.ஜி புற்றுநோய் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் டி. பாலாஜி, பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் டி.எம். சுபாராவ்,குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாவை அருணாச்சலம், புற்று நோய்கள் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.எஸ் ராஜ்குமார், இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாலு குப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் இந்தியா முழுவதும் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.பயிலரங்கில் 40 மருத்துவர்களுக்கு ரோபோடிக் அறுவை சிகிச்சை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இரண்டாவது நாள் நடைபெற்ற கருத்தரங்கில்,சென்னை காவேரி மருத்துவமனை டாக்டர் சுஜய் சுசிகர்,டாக்டர் பினக் தாஸ் குப்தா,பெங்களூரு அஸ்டர் மருத்துவமனை டாக்டர் அஸ்வின்,புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை டாக்டர் சக்திவேல், ஸ்வாகத் மருத்துவமனை டாக்டர் சுபாஷ் கண்ணா,ஜெம் மருத்துவமனை டாக்டர் சி. பழனிவேலு, அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் பி.வெங்கட் உள்ளிட்ட பலர் ரோபோடிக் குறித்த பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்தனர்.

பயிலரங்கு மற்றும் கருத்தரங்கில் பிஎஸ்ஜி மருத்துவமனை டாக்டர்கள் ராஜேஷ்குமார், விஷ்ணுவர்தன், தேவி பாலசுப்ரமணியம், அருள் முருகன், சுருதி நஞ்சுண்டப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க