• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொள்ளாச்சி பகுதியில் பேருந்தில் பறிகொடுத்த 34 1/2 சவரன் தங்க நகையை மீட்ட கோவை மாவட்ட காவல்துறையினர்

October 10, 2024 தண்டோரா குழு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் வசிக்கும் தங்கலெட்சுமி(50) என்பவர் கடந்த 05.10.2024 அன்று அவரது சொந்த ஊரான திருநெல்வேலிக்கு சென்று விட்டு பொள்ளாச்சிக்கு பேருந்தில் வந்து பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இறங்கி சென்றுள்ளார்.

இந்நிலையில் பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் போது அவரது தங்க நகையான 34 1/2 சவரன் தங்க நகை , ரூபாய் 1000/-மற்றும் செல்போன்-1 ஆகியவற்றை தவற விட்டுச் சென்றுள்ளார். இது சம்மந்தமாக பாதிக்கப்பட்ட நபர் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இப்புகாரில் விரைந்து நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன்,உத்தரவிட்டதன்பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன்விசாரணை மேற்கொண்டு வந்ததில் கோவை to பொள்ளாச்சி சாலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த கருப்பையா மகன் முருகன் (50) என்பவர் 34 1/2 சவரன் தங்க நகைகளுடன் பிடிபட்டார்.

இந்நிலையில் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் மேற்படி நபரை கைது செய்து அவரிடமிருந்து மேற்படி வழக்கில் சம்மந்தப்பட்ட 34 1/2 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து மேற்படி நபரின் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்.தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212‌ மற்றும் வாட்சப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

மேலும் படிக்க