• Download mobile app
22 Oct 2024, TuesdayEdition - 3177
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்டம் முழுவதும் சட்டவிரோத செயல்கள் மற்றும் குற்றங்களை தடுக்கும் நோக்கில் தனிப்படைகள் அமைத்து நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட எஸ்.பி.

October 13, 2024 தண்டோரா குழு

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன்,முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக கடந்த இரண்டு நாட்களாக (12.10.2024, 13.10.2024) கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் கடந்த 15 வருடங்களில் கஞ்சா வழக்குகளில் சம்மந்தப்பட்ட சுமார் 2000 பழங்குற்றவாளிகளை கண்காணிக்க 86 தனிப்படைகள் என சுமார் 400 காவல்துறையினர் மூலம் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேற்படி கஞ்சா வேட்டையில் இக்குற்றவாளிகள் அனைவரின் இருப்பிடங்களையும் சோதனை செய்து , 22 கஞ்சா குற்றவாளிகள் மீது 16 வழக்குகள் பதிவு செய்தும்,அவர்களிடமிருந்த சுமார் 28 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 84 நபர்கள் மீது 83 வழக்குகள் பதிவு செய்தும்,சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்த 38 நபர்கள் மீது 38 வழக்குகள் பதிவு செய்தும்,சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்த 46 நபர்கள் மீது 46 வழக்குகள் பதிவு செய்தும், குற்ற வழக்குகளில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்து பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 18 நபர்களை தேடி பிடித்து கைது செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கஞ்சா விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகள் மீதான கஞ்சா வேட்டை தொடர்ந்து நடைபெறும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடுமையாக எச்சரித்துள்ளார்.மேலும் இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க