• Download mobile app
18 Apr 2025, FridayEdition - 3355
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

யுவராஜ் கணக்கு இன்னும் முடியல : கோலி!

January 26, 2017 tamilsamayam.com

இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தனது கணக்கை முடித்துக்கொள்ள இன்னும் சரியான நாள் வரவில்லை என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளர்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் என குறுகிய தொடரில் பங்கேற்கிறது. ஒருநாள் தொடரை இந்திய அணி, 2-1 என கைப்பற்றியது. இதன் பின் இரு அணிகள் மோதும் டி-20 தொடர், இன்று கான்பூரில் துவங்குகிறது.

இத்தொரில், தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். அதேபோல, சீனியர் வீரரான யுவராஜ் சிங் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். ஒருநாள் தொடரில் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட யுவராஜ், டி-20 தொடரிலும் அசத்துவார் என கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோலி கூறுகையில்,

’ டி-20 போட்டிகளில் யுவராஜ் சிங் ஒரு ஸ்பெஷலிஸ்ட். ஒரே ஆளாக போட்டிகளில் வெல்லும் திறமை படைத்தவர் அவர். அதை நான் சொல்லத்தேவையில்லை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவர் கிரிக்கெட் விளையாடவில்லை என்றாலும், அவர் இதற்காக கடினமாக பாடுபட்டுள்ளார். இந்திய அணியில் அவரின் கணக்கு இன்னும் முடியவில்லை. நிச்சயம் அவர் பல வெற்றிகளை தேடித்தருவார். .’ என்றார்.

மேலும் படிக்க