• Download mobile app
22 Apr 2025, TuesdayEdition - 3359
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் நாளை முதல் மழை குறையும்

January 28, 2017 தண்டோரா குழு

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை,மேற்கு நோக்கி நகர்வதால் தமிழகத்தில் தற்போது பெய்து வரும் மழை, ஞாயிற்றுக்கிழமை முதல் குறையும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

“வங்கக் கடலில், மன்னார் வளைகுடா அருகில் நேற்று நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை குமரி கடல் அருகே சனிக்கிழமை நிலைகொண்டுள்ளது.

இதன் காரணமாக அடுத்த, 24 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் மாவட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும்.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது என்றும் அதிகபட்சமாக பம்பான் பகுதியில் 13 செ.மீ. மழையும், ராமேஸ்வரத்தில் 11 செ. மீ. மழையும் பதிவாகியுள்ளது”
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க