• Download mobile app
22 Apr 2025, TuesdayEdition - 3359
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மத்திய தரைக்கடலில் 1,000 அகதிகள் மீட்பு

January 28, 2017 தண்டோரா குழு

மத்திய தரைக்கடலில் சிக்கித் தவித்த 1,000 அகதிகளை இத்தாலி நாட்டின் கடலோரக் காவல் படையினர் மீட்டுள்ளனர்.

இது குறித்து இத்தாலி கடலோரக் காவல் படையின் அதிகாரி செய்தியாளர்களிடம் சனிக்கிழமை (ஜனவரி28) கூறுகையில், “மத்திய தரைக்கடலில் சிக்கித் தவித்த 1,000 வெளிநாட்டு அகதிகளைப் பத்திரமாக மீட்டுள்ளோம். ஆறு ரப்பர் படகுகள் மற்றும் மூன்று மரக்கப்பல்களில் பயணம் செய்த அந்த அகதிகளை இத்தாலிய கடலோர காவல் படை, ஸ்பெயின் நாட்டு மனிதாபிமான குழு மற்றும் கரிபியன் சுப்ளை கப்பல் ஆகியவற்றின் உதவியுடன் அகதிகள் மீட்டோம். ஒரு ரப்பர் படகில் இறந்த பயணியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர் எந்த நாட்டைச் சார்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை” என்றார்.

ஐரோப்பாவில் நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் குடியேறுகின்றனர். லிபியா நாட்டில் இருந்து இத்தாலிக்கு நிலையற்ற வட ஆப்பிரிக்க மாநிலங்களைச் சேர்ந்த ஆள் கடத்தல்காரர்கள் மூலம் செல்கின்றனர்.

கடந்த ஆண்டில் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து மட்டும் 1 லட்சத்து 81 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இத்தாலி நாட்டிற்கு அகதிகளாக வந்து சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க