January 28, 2017
தண்டோரா குழு
மத்திய தரைக்கடலில் சிக்கித் தவித்த 1,000 அகதிகளை இத்தாலி நாட்டின் கடலோரக் காவல் படையினர் மீட்டுள்ளனர்.
இது குறித்து இத்தாலி கடலோரக் காவல் படையின் அதிகாரி செய்தியாளர்களிடம் சனிக்கிழமை (ஜனவரி28) கூறுகையில், “மத்திய தரைக்கடலில் சிக்கித் தவித்த 1,000 வெளிநாட்டு அகதிகளைப் பத்திரமாக மீட்டுள்ளோம். ஆறு ரப்பர் படகுகள் மற்றும் மூன்று மரக்கப்பல்களில் பயணம் செய்த அந்த அகதிகளை இத்தாலிய கடலோர காவல் படை, ஸ்பெயின் நாட்டு மனிதாபிமான குழு மற்றும் கரிபியன் சுப்ளை கப்பல் ஆகியவற்றின் உதவியுடன் அகதிகள் மீட்டோம். ஒரு ரப்பர் படகில் இறந்த பயணியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர் எந்த நாட்டைச் சார்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை” என்றார்.
ஐரோப்பாவில் நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் குடியேறுகின்றனர். லிபியா நாட்டில் இருந்து இத்தாலிக்கு நிலையற்ற வட ஆப்பிரிக்க மாநிலங்களைச் சேர்ந்த ஆள் கடத்தல்காரர்கள் மூலம் செல்கின்றனர்.
கடந்த ஆண்டில் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து மட்டும் 1 லட்சத்து 81 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இத்தாலி நாட்டிற்கு அகதிகளாக வந்து சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.