• Download mobile app
22 Apr 2025, TuesdayEdition - 3359
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இடைக்கால தடையை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஹென்றி

February 2, 2017 தண்டோரா குழு

சென்னை உயர் நீதிமன்றத்தின் வீட்டுமனை விற்பனைகள் மீதான இடைக்கால தடையை நீக்குவதற்கு தமிழக அரசு சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் சங்க தேசிய தலைவர் ஹென்றி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கோவையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் வியாழக்கிழமை கூறியதாவது; “சென்னை உயர் நீதிமன்றம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம், அங்கீகாரம் இல்லாத பட்டா நிலத்தில் கட்டியுள்ள வீடு மற்றும் வீட்டுமனைப் பிரிவுகளை இனிமேல் பத்திர பதிவு செய்வதற்கு இடைக்கால தடை என உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவின் மூலம் தமிழ்நாடு அரசுக்கு மிகப்பெரும் அளவில் வருவாய் ஈட்டித் தரும் இரண்டாவது பெரிய துறையான பத்திரப் பதிவுத் துறைக்கு பலகோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்.

அதுமட்டுமல்ல அங்கீகாரம் பெறாத வீட்டு மனைகளை வாங்கி வீடு கட்டியவர்கள் இனிமேல் அவசர தேவைக்கு மறு விற்பனை செய்ய இயலாது. கட்டுமானத்துறை சார்ந்த தொழில்கள் வீழ்ச்சி அடைவதோடு, இதனை நம்பி இருக்கும் பல லட்சம் குடும்பங்கள் நிரகதயாய் நிற்க நேரிடும்.

ஆகவே தமிழக அரசு இதில் விரைந்து நடவடிக்கை எடுத்து வீட்டுமனை பிரிவுகளையும், வீடுகளையும் மறுபதிவு செய்ய ஆவண செய்ய வேண்டும்.

சென்னை நீதிமன்றத்தின் இந்த இடைக்கால தடை உத்தரவு மீதான வழக்கு விசாரணை வரும் 27.02.2017 அன்று விசாரணைக்காக வருகிறது. இந்த இடைக்கால உத்தரவை நீக்குவதற்கு தமிழக அரசு சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்”.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க