• Download mobile app
22 Apr 2025, TuesdayEdition - 3359
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

1௦ தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு

February 7, 2017 தண்டோரா குழு

இலங்கையின் நெடுந்தீவு அருகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 1௦ மீனவர்களை இலங்கை கடற்படையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

இது குறித்து மீன்வளத் துறை துணை இயக்குநர் கொளஞ்சிநாதன் கூறுகையில்,

“நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த 1௦ மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களுடைய படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

அதோடு அவர்களிடம் இருந்த மீன் வலைகள் மற்றும் உபகரணங்களைச் சேதப்படுத்தியுள்ளனர். அவர்கள் ராமேஸ்வரத்தில் உள்ள தங்கச்சிமடத்தை சேர்ந்தவர்கள். தற்போது அவர்களை காங்கேசன் துறைமுகத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்” என்றார்.

இதைப்போல் பிப்ரவரி 1ம் தேதி, இலங்கை கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டை சேர்ந்த 5 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுடைய படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இலங்கை கடற்படையினரால் மீனவர்களுக்கு நேரும் இந்த பிரச்சினையால் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, பிடிக்கப்பட்ட 25 மீனவர்கள் மற்றும் 119 படகுகளை இலங்கை காவலில் இருந்து விடுவிக்க பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் பிப்ரவரி 2ம் தேதி கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க