• Download mobile app
22 Apr 2025, TuesdayEdition - 3359
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

“74 இந்திய வீரர்கள் பாகிஸ்தான் சிறையிலிருக்கலாம்”

February 10, 2017 தண்டோரா குழு

இந்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த காணாமல் போன 74 வீர்கள் பாகிஸ்தான் நாட்டின் சிறையில் இருக்கலாம் என்று வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே. சிங் கூறினார்.
மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தில் அவர் அளித்த பதிலில் இதைத் தெரிவித்தார்.

“இது தொடர்பாக பாகிஸ்தான் அரசிடம் இந்திய அரசு பலமுறை கேள்வி எழுப்பியது. எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, காணாமல் போன 74 வீர்களும் பாகிஸ்தான் நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. ஆனால், அவர்கள் அதை பாகிஸ்தான் இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை.

2௦௦7ம் ஆண்டு காணாமல் போன வீரர்களுடைய உறவினர்களைக் கொண்ட குழு பாகிஸ்தான் சிறைக்குச் செய்தது. ஆனால், அவர்கள் அங்கு இருப்பதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை” என்றார் அமைச்சர்.“பாகிஸ்தான் சிறையில் இந்தியர்கள் என்று கருதப்படும் 208 பேர் இருக்கின்றனர். அவர்களில் 147 இந்திய மீனவர்கள். மற்றவர்கள் பல்வேறு குற்றங்களுக்காக சிறையில் உள்ளனர்” என்றும் வி.கே. சிங் கூறினார்.

மேலும் படிக்க