February 13, 2017
தண்டோரா குழு
கேரள மாநிலத்தில் பா.ஜ.க. தொண்டர் நிர்மல் (2௦) ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 13) கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருசூர் மாவட்டத்தில் உள்ள முக்கட்டுகரா என்னும் இடத்தில் அக்கட்சியின் தொண்டர் நிர்மல் ஞாயிற்றுக்கிழமை இரவு கொல்லப்பட்டார்.
இந்தக் கொலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் காரணம் என்று பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது. அக்கட்சியினர் திருசூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை கடையடைப்பு வேலைநிறுத்தம் நடத்தினர்.
பாஜக மீது தாக்குதல் நடத்தப்படுவது தொடர்வதாக அக்கட்சி புகார் கூறியுள்ளது.
“2௦17ம் ஆண்டு, ஜனவரி மாதம் தல்லாசேரி மாவட்டத்திம் தர்மடம் கிராமத்தில் சந்தோஷ் (52) என்ற கட்சித் தொண்டர் வீட்டில் தனியாக இருந்தபோது, மார்க்சிஸ்ட் கட்சியினர் கொலை செய்தனர். அதே நாளில், தள்ளிபரம்பா என்னும் இடத்தில் இருந்த ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தின் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. அதிர்ஷ்டவசமாக ஒருவருக்கும் காயம் ஏற்படவில்லை. அலுவலகத்தின் கண்ணாடி ஜன்னல்கள் சேதமடைந்தன.
கேரள மாநிலத்தில் 57-வது மாநில பள்ளிக் கலை விழா நடைபெற்ற போது, அரசியல் வன்முறைகள் நடந்தன. கடைகள் மூடப்பட்டிருந்தது. வாகனங்களும் சாலையில் பயணம் செய்ய தடைவிதிக்கப்பட்டு இருந்தது.
இவ்வாறு அரசியல் வன்முறைகள் நடைபெறாமல் இருக்க வேண்டும். என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலையிட்டு நிறுத்த வேண்டும்“
என்று பாஜகவைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.