• Download mobile app
22 Apr 2025, TuesdayEdition - 3359
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கேரளத்தில் பா.ஜ.க. தொண்டர் கொலை

February 13, 2017 தண்டோரா குழு

கேரள மாநிலத்தில் பா.ஜ.க. தொண்டர் நிர்மல் (2௦) ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 13) கொலை செய்யப்பட்டுள்ளார்.

திருசூர் மாவட்டத்தில் உள்ள முக்கட்டுகரா என்னும் இடத்தில் அக்கட்சியின் தொண்டர் நிர்மல் ஞாயிற்றுக்கிழமை இரவு கொல்லப்பட்டார்.

இந்தக் கொலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் காரணம் என்று பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது. அக்கட்சியினர் திருசூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை கடையடைப்பு வேலைநிறுத்தம் நடத்தினர்.

பாஜக மீது தாக்குதல் நடத்தப்படுவது தொடர்வதாக அக்கட்சி புகார் கூறியுள்ளது.

“2௦17ம் ஆண்டு, ஜனவரி மாதம் தல்லாசேரி மாவட்டத்திம் தர்மடம் கிராமத்தில் சந்தோஷ் (52) என்ற கட்சித் தொண்டர் வீட்டில் தனியாக இருந்தபோது, மார்க்சிஸ்ட் கட்சியினர் கொலை செய்தனர். அதே நாளில், தள்ளிபரம்பா என்னும் இடத்தில் இருந்த ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தின் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. அதிர்ஷ்டவசமாக ஒருவருக்கும் காயம் ஏற்படவில்லை. அலுவலகத்தின் கண்ணாடி ஜன்னல்கள் சேதமடைந்தன.

கேரள மாநிலத்தில் 57-வது மாநில பள்ளிக் கலை விழா நடைபெற்ற போது, அரசியல் வன்முறைகள் நடந்தன. கடைகள் மூடப்பட்டிருந்தது. வாகனங்களும் சாலையில் பயணம் செய்ய தடைவிதிக்கப்பட்டு இருந்தது.

இவ்வாறு அரசியல் வன்முறைகள் நடைபெறாமல் இருக்க வேண்டும். என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலையிட்டு நிறுத்த வேண்டும்“

என்று பாஜகவைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க