• Download mobile app
18 Apr 2025, FridayEdition - 3355
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரெய்னாவுடன் கைகோர்க்கும் கைப்: பட்ட கஷ்டம் வீணாகல!

February 18, 2017 tamilsamayam.com

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைப், குஜராத் அணியின் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் ஆண்டுதோறும் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடர் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,). இதில் இந்திய நட்சத்திரங்கள் மட்டுமில்லாமல் வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்பதால், ரசிகர்கள் மத்தியில் இத்தொடருக்கான வரவேற்பு எப்போதும் எகிறியே காணப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல்., அட்டவணையை இந்திய கிரிக்கெட் போர்டு ([பி.சி.சி.ஐ.,) சமீபத்தில் வெளியிட்டது. வரும் ஏப்ரம் 5ல் துவங்கும் இதன் முதல் போட்டி மே 21 வரை நீடிக்கிறது. 47 நடக்கும் இத்தொடரில் மொத்தம் 60 போட்டிகள் நடக்கிறது.

இதில் கடந்த ஆண்டு அறிமுகமாகி அசத்திய ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணி, இந்த ஆண்டு மேலும் உற்சாகத்துடன் களமிறங்கவுள்ளது. இந்திய அணியின் சிறந்த பீல்டராக திகழ்ந்த முகமது கைப்பை அந்த அணியின் துணை பயிற்சியாளராக அந்த அணி நிர்வாகம் நியமித்துள்ளது.

இதுகுறித்து அந்த அணி நிர்வாகி ஒருவர் கூறுகையில்,’ இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட மேலும் உற்சாகத்துடன் களமிறங்கவுள்ளோம். அதற்கு முகமது கைப்பின் வருகையும் ஒரு காரணம். அவரது வருகை மேலும் அணி வீரர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் என நம்புகிறோம். இதே நிலையை பி.சி.சி.ஐ.,யுடன் தொடர்ந்து நிச்சயம் வெளிப்படுத்தும்வோம்.’ என்றார்.

மேலும் படிக்க