• Download mobile app
23 Apr 2025, WednesdayEdition - 3360
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மத்திய அரசிடம் தமிழக அரசு அழுத்தம் கொடுக்கும் – ஜெயக்குமார்

March 7, 2017 தண்டோரா குழு

மீனவர் பிரச்சினையைத் தீர்க்க மத்திய அரசிடம் தமிழக அரசு அழுத்தம் கொடுக்கப்படும் என்று தமிழக நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர் பிரிட்ஜோ குடும்பத்தினருக்கு அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சென்று செவ்வாய்கிழமை ஆறுதல் கூறினர்.

அதன் பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

“ராமேஸ்வரம் மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையால் தமிழக (ராமேஸ்வரம்) மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்தி கிடைத்தது. தமிழக மீனவர்கள் மீதான இந்த தாக்குதல் சம்பவம் மிகவும் கண்டிக்கதக்கது.

மத்திய அரசிடம் தமிழக அரசு அழுத்தம் கொடுத்து மீனவர் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வலியுறுத்துவார்கள்.

நாடாளுமன்றத்தில் தமிழக உறுப்பினர்கள் தமிழக மீனவர்களின் வேதனையைத் தெரிவிப்பார்கள். பல நூறு ஆண்டுகளாக கச்சத் தீவில் தமிழர்கள் மீன்பிடித்துக் கொண்டுதான் இருந்தனர். இந்த பிரச்சினைக்கு நிரந்திர தீர்வு காண கச்சத் தீவை மீட்டே தீருவோம்”.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

மேலும் படிக்க