• Download mobile app
18 Apr 2025, FridayEdition - 3355
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாய்னா தோல்வி!

March 11, 2017 tamilsamayam.com

ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் தொடரின் காலிறுதியில் இந்தியாவின் சாய்னா, அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் தொடர் நடக்கிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சாய்னா நேவல், உலகின் நம்பர்-3 வீராங்கனையான கொரியாவின் சங் ஜி யுனை எதிர்கொண்டார்.

இதன் முதல் செட்டை 20-22 என இழந்த சாய்னா, தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டையும் 20-22 என போராடி தோற்றார்.

முடிவில், இந்தியாவின் சாய்னா நேவல், கொரியாவின் சங் ஜி யுனிடம் 20-22, 20-22 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து வெளியேறினார்.

மேலும் படிக்க