• Download mobile app
23 Apr 2025, WednesdayEdition - 3360
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது – சென்னை வானிலை ஆய்வு மையம்

March 13, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்குக் கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ். பாலசந்திரன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் திங்கட்கிழமை கூறுகையில், “தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டது. வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், இதன் காரணமாக மாலை நேரங்களில் மேகங்கள் உருவாகி மழை பெய்யும் இதனைக் கோடை மழை என்று அழைக்கிறோம்.

தமிழக கடலோர பகுதிகளில் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையோ, காற்றின் மேலடுக்கில் ஏற்படும் சுழற்சியோ எதுவும் உருவாகவில்லை. எனவே, கோடை காலத்தையொட்டி அடுத்து 5 நாட்களுக்குத் தமிழகத்தில் உள்மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது” என்றார்.

மேலும் படிக்க