• Download mobile app
23 Apr 2025, WednesdayEdition - 3360
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தி.மு.க. போராட்டம் தேவையற்றது – எடப்பாடி பழனிசாமி

March 13, 2017 தண்டோரா குழு

தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகளின் முன் தி.மு.க. போராட்டம் நடத்துவது தேவையற்றது என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலத்தில் உள்ள ஏரியைச் சீரமைக்கும் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திங்கட்கிழமை தொடங்கி வைத்தார்.

அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழகத்திற்கு தேவையான 20 ஆயிரம் டன் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டு, நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

அனைத்து நியாயவிலைக் கடைப் பொருட்களும் ஏழை, எளிய மக்களுக்குக் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நியாயவிலைக் கடைகளில் தட்டுப்பாடு இல்லாமல் குடும்ப அட்டைதாரர்களுக்கு பாமாயில் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இருக்க தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகள் முன் தி.மு.க. போராட்டம் நடத்துவது தேவையற்றது.

தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன ‘ என்றார் எடப்பாடி பழனிசாமி.

மேலும் படிக்க