• Download mobile app
23 Apr 2025, WednesdayEdition - 3360
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மடிக்கும் வசதி கொண்ட புதிய ஸ்மார்ட் போன் விரைவில் அறிமுகம்

March 16, 2017 தண்டோரா குழு

‘சாம்சங்’ நிறுவனத்தின் மடிக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட் போன்களின் தயாரிப்புப் பணிகள் நடப்பு ஆண்டில் இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

2௦17ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் இந்த போனை தென் கொரியாவின் பெரிய நிறுவனமான ‘சாம்சங்’ நிறுவனம் தயாரிக்கத் தொடங்கும்.

“செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கவிருக்கும் ஐஏஎப் 2௦17 விழாவில் மடிக்கும் வசதி கொண்ட ‘ஸ்மார்ட் போன் கியூ 3 2௦17’ அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. பொதுவாக சாம்சங் நிறுவனம் ‘காலக்ஸி நோட்ஸ்’ ரக ஸ்மார்ட் போனைகள் அறிமுகப்படுத்துவது வழக்கம். மடிக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட் போனை மக்களுக்கு வழங்குவது தவிர்க்க முடியாதது” என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அந்த நிறுவனம் மடிக்கும் வசதி கொண்ட சாதனத்தைத் தயாரிப்பதற்கான காப்புரிமையைப் பெறுவதற்கு கொரியாவில் பதிவு செய்திருந்தது. பாதியாக மடிக்கும் வசதிக்கொண்ட இந்த சாதனம் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, ‘கேலக்ஸி X’ என்னும் ஸ்மார்ட் போனில் மற்ற ஸ்மார்ட் போனிலுள்ள ‘பேக் பட்டன்’ இடது புறத்திலும் வலது புறத்தில் ‘மெனு பட்டன்’, நடுவில் சாம்சுங் ‘ஹோம் பட்டன்’ இருக்கும்.

மேலும் படிக்க