• Download mobile app
23 Apr 2025, WednesdayEdition - 3360
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆர்.கே. நகர் தேர்தல் அதிகாரி மாற்றம் ஐஏஎஸ் அதிகாரி நியமனம்

March 18, 2017 தண்டோரா குழு

சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலராக இருந்த பத்மஜாதேவி மாற்றம் செய்யப்பட்டு அவருக்குப் பதிலாக ஐஏஎஸ் அதிகாரியான பிரவீண் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ந் தேதி மரணம் அடைந்தார். அதையடுத்து, அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.கே. நகர் தொகுதி காலியானது.

அந்தத் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதையடுத்து ஆர்.கே. நகரில் தேர்தல் நடத்தும் அதிகாரியாக பத்மஜாதேவி நியமனம் செய்யப்பட்டார்.

தேர்தல் நடத்தும் அதிகாரியை மாற்ற வேண்டும் என்று தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன.

இந்நிலையில், பத்மஜாதேவி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரவீண் நாயர் தேர்தல் நடத்தும் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க