• Download mobile app
23 Apr 2025, WednesdayEdition - 3360
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உ.பி.யில் அரசு அலுவலகங்களில் பான்மசாலா, புகையிலை பயன்படுத்தத் தடை

March 22, 2017 தண்டோரா குழு

உத்தரப்பிரதேச மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற பின்பு முதற்கட்டமாக, அனைத்து அமைச்சர்களும் 15 நாளில் தங்களது சொத்துக் கணக்கை வெளியிட வேண்டும் என்றும்,மேலும் அமைச்சர்களிடம் உள்ள அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் தொடர்பான விபரங்களை வெளியிட வேண்டும் என்றும் உத்தரவைப் பிறப்பித்தார்.

இதனைத்தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலைமைச் செயலகம் உள்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணியின் போது அதிகாரிகள் பான்மசாலா, புகையிலைப் பொருட்கள் பயன்படுத்த கூடாது என்று அடுத்த உத்தரவை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பிறப்பித்துள்ளார்.

மேலும், இந்த உத்தரவை மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களிலும் பின்பற்றும்படியும், தவறும்பட்சத்தில் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க