• Download mobile app
23 Apr 2025, WednesdayEdition - 3360
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முதல்வர் தொகுதி பிரதமரின் தொகுதியாக மாறும் – தமிழசை

March 23, 2017 தண்டோரா குழு

ஆர்.கே.நகரில் பா.ஜ.க வெற்றி பெற்றால் அந்தத் தொகுதி மோடியின் நேரடிப் பார்வைக்குச் சென்று விடும் என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க, சார்பில் கங்கை அமரன் போட்டியிடுகிறார். இவர் பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்திரராஜனு டன் பேரணியாக சென்று வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

அப்போது பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்.

பா.ஜ.க வெற்றி பெற்றால்,ஆர்.கே.நகர் தொகுதி பிரதமர் மோடியின் நேரடி பார்வைக்கு சென்றுவிடும். இதன் மூலம் எந்தளவிற்கு பலன்பெறும் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். முதல்வர் தொகுதியாக இருந்தது பிரதமரின் தொகுதியாக மாறும் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க