March 24, 2017
தண்டோரா குழு
பாதுகாப்பான முறையில் மின்னணுப் பரிவர்த்தனையை மேற்கொள்ள கூகுள் நிறுவனத்துடன் மத்திய அரசு,இணைந்துள்ளது.
பாதுகாப்பான மின்னணுப் பணப்பரிமாற்றம் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக, மத்திய அரசும் கூகுள் நிறுவனமும் கைகோர்த்துள்ளன. கூகுள் நிறுவனத்தின் தென்கிழக்காசிய பிரிவு துணைத் தலைவர் ராஜன் ஆனந்தனும் மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சகச் செயலாளர் சுந்தரராஜனும் இதற்கான ஒப்பந்தத்தில் டெல்லியில் கையெழுத்திட்டனர்.
மேலும் மின்னணு பணப்பரிமாற்றம் செய்வதன் அவசியம் குறித்தும் அதை பாதுகாப்பாக எப்படி மேற்கொள்வது குறித்தும் தகவல்கள் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்படும் என ராஜன் ஆனந்தன் பேசினார்.