• Download mobile app
23 Apr 2025, WednesdayEdition - 3360
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியர் ஒருவர் நடத்திய கடத்தல் நாடகம் அம்பலம்

March 24, 2017 தண்டோரா குழு

செர்பியா நாட்டில் இந்தியர் ஒருவர் கடத்தப்பட்டு துன்புறுத்தப்படுவதாக வந்த மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்க்கு தகவல் கிடைத்தது. ஆனால் அந்த சம்பவம் உண்மையில்லை என்றும் அந்த நபரே அந்த கடத்தல் நாடகத்தை நடத்தியுள்ளார் என்றும் அவர் கண்டுபிடித்துள்ளார்.

வெளி நாடுகளில் வாழும் இந்தியர்கள் பிரச்சனையில் சிக்கிகொண்டால், அவர்களுக்கு உதவ மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் எப்பொழுதும் முன் வருவார் என்பது அனைவருக்கும் அறிந்ததே.

சில தினங்களுக்கு முன், சுஷ்மா ஸ்வராஜின் அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்திற்கு ஒருவர் உதவி கேட்டு தகவல் கொடுத்துள்ளார். அதில், “செர்பியா நாட்டிலிருக்கும் என் சகோதரை கடத்தி, பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பணத்தை தரவில்லை என்றால் அவனை கொன்றுவிடுவதாக கூறியுள்ளனர். என் சகோதரனை காப்பாற்றுங்கள்” என்று பதிவிட்டிருந்தார்.

மேலும் அதில் ஒருவர் கைகள் கட்டப்பட்டு, அவரை லத்தியால் அடிப்பது போன்ற காணொளி காட்சியையும் பதிவிட்டிருந்தார்.

இது குறித்து சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வியாழக்கிழமை கூறுகையில்

“இச்சம்பவம் தொடர்பான அனைத்து உண்மைகளும் எனக்கு கிடைத்துள்ளது. உங்கள் சகோதரனை யாரும் கடத்தவில்லை. அந்த கடத்தல் நாடகத்தை அவரே நடத்தியுள்ளார். மேலும், அந்த காணொளியும் பொய்யானது .உங்கள் சகோதரன் வினய் மகாஜன் கண்டுப்பிடிக்கப்படுள்ளார். அவர் செர்பிய நாடு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்த பிரச்சனைக்கு அவரை அனுப்பிய ஏஜென்ட் தான் காரணம்” என்று பதிவிட்டிருந்தார்.

மேலும் படிக்க