• Download mobile app
10 Apr 2025, ThursdayEdition - 3347
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜி.வி. பிரகாஷ் குமார் படத்தில் இருந்து விலகினார் மடோன்னா

March 30, 2017 தண்டோரா குழு

பிரபல நடிகர் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்க நடிகை மடோனா செபாஸ்டியன் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இசையமைப்பாளராக இருந்த ஜி.வி பிரகாஷ், நடிக்க ஆரம்பித்து தற்போது முழுநேர நகராகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வருகிறார். அதேசமயம் தமிழில் அதிக படங்களில் நடித்து வரும் நடிகர்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருகிறார்.

ஜி.வி. பிரகாஷ் தற்போது ‘ஈட்டி’ பட இயக்குனர் ரவி அரசு இயக்கும் ‘ஐங்கரன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்க பிரேமம் புகழ் மடோனா செபாஸ்டியனிடம் முதலில் பேசி வந்தனர்.

இந்நிலையில், கால்ஷீட் தேதிகள் சரிவராது என்று காரணம் கூறி பிரகாஷோடு நடிக்க மறுத்திருக்கிறாராம் மடோன்னா .இதைத் தொடர்ந்து ‘சாட்டை’ மகிமாவை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். ‘குற்றம் 23’ படத்தில் பேரழகாக வெளிப்பட்டதைத் தொடர்ந்து மகிமாவுக்கு வாய்ப்புகள் ஏராளமாக குவிகிறதாம்.

மேலும் படிக்க