• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக அரசால் விவசாயிகளின் பிரச்னையை தீர்க்க முடியாது – மு.க ஸ்டாலின்

April 4, 2017 தண்டோரா குழு

தமிழக விவசாயிகளின் பிரச்னையை தீர்க்க தமிழக அரசால் நிச்சயம் முடியாது என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க., செயல் தலைவருமான மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை பேசுகையில்

“சென்னை ஆர்.கே.நகரில் இடைத்தேர்தலுக்காக அதிகாரிகள் மாற்றப்பட்டது வரவேற்கத்தக்கது. தில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

தில்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகளை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேச வேண்டும். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தில்லி சென்று விவசாயிகளை சந்திக்க வேண்டும். பிரச்னையை தீர்க்குமாறு பிரதமரை நேரில் சந்தித்து அவர் வலியுறுத்த வேண்டும். விவசாயிகள் பிரச்னையை தீர்க்க தமிழக அரசால் நிச்சயம் முடியாது. மக்களை பற்றி தமிழக அரசு கவலைப்படவில்லை.”

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க