• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இயக்குனர் மணிரத்னம் வீட்டு முன்பு தீக்குளிப்பேன் – லைட் மேன் மிரட்டல்

April 17, 2017 தண்டோரா குழு

தனக்கு இழப்பீடு வழங்காவிட்டால், இயக்குநர் மணிரத்னம் வீட்டுக்கு முன்பு தற்கொலை செய்து கொள்வேன் என லைட்மேன் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இயக்குநனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டு அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன் நடிப்பில் வெளியாகிய படம் குரு. இந்த படத்தில் லைட்மேனாக மணிமாறன் என்பவர் பணியாற்றியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, மணிமாறனுக்கு ரத்தம் தொடர்பான தொற்று நோய் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது, அவர் தனக்கு நிதியுதவி அளிக்குமாறு இயக்குநர் மணிரத்னம் மற்றும் லைட்மேன் சங்கம் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் இருதரப்பினரும் மணிமாறனை கண்டுகொள்வதாக இல்லை. இதனைத் தொடர்ந்து கடந்த 2007-ஆம் ஆண்டு லைட்மேன் சங்கத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் மணிமாறன் வழக்கு தொடுத்தார். அதில் மணிமாறனுக்கு சாதகமான தீர்ப்பு
வந்தது. ஆனாலும் லைட் மேன் சங்கம், அவருக்கான நிவாரண உதவியை தற்போது வரை செய்யவில்லை.

இதனால் கடும் வேதனைக்குள்ளாகியுள்ள மணிமாறன் தனக்கு வரவேண்டிய பணம் வரவில்லை என்றால் நான் மணிரத்னம் வீட்டு முன்பு தீக்குளித்து தற்கொலை செய்துகொள்வேன் என கூறியுள்ளார்.

மேலும் படிக்க