• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு “டிஜிட்டல்” உரிமம் வழங்கியது மத்திய அரசு

April 18, 2017 தண்டோரா குழு

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்குமத்தியதகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம்“டிஜிட்டல்” உரிமம் வழங்கியுள்ளது.

கடந்த 2007 ம் ஆண்டு தமிழக அரசு குறைந்த செலவில் கேபிள் டி.வி. வழங்குவதற்காக, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை தொடங்கியது.இதைத்தொடர்ந்து 2012 ம் ஆண்டு தமிழக அரசு டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்தது.ஆனால்விண்ணப்பத்தின் மீது எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை.

இந்நிலையில், தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் வழங்கி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் மாநில அரசின் நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் வழங்கப்படுவது இது முதல்முறையாகும்.

இதன் மூலம் குறைந்த செலவில் உலக தரம் வாய்ந்த சேவையில் 90முதல் 100 சேனல்களை காணலாம்.

மேலும், அரசு கேபிள்களுக்கு டிஜிட்டல் உரிமம் வழங்கிய பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிநன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க