• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக முதல்வர் காரில் இருந்த சுழலும் சிவப்பு விளக்குகள் அகற்றப்பட்டது

April 20, 2017 தண்டோரா குழு

மத்திய அமைச்சரவை முடிவினைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது காரில் இருந்த சுழலும் சிவப்பு விளக்குகளை அகற்றினார்.

ஆபத்து காலத்தில் அவசர சேவைக்காக செல்லும் வாகனங்களை தவிர ஜனாதிபதி, பிரதமர், மந்திரிகள் மற்றும் வி.ஐ.பி.களின் வாகனங்களில் இருந்து சுழலும் சிவப்பு விளக்குகள் அகற்றப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் ஆகிய 3 பேருக்கு மட்டும் இதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தனது காரில் இருந்த சுழலும் சிவப்பு விளக்குகள் அகற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க