• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இயக்குனர் கே. விஸ்வநாதுக்கு தாதா சாகேப் பால்கே விருது

April 24, 2017 தண்டோரா குழு

பழம்பெரும் இயக்குநர் கே.விஸ்வநாத்திற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஏராளமான படங்களை இயக்கி, நடித்தவர் கே.விஸ்வநாத்.அவருக்கு வயது 87. ‘குருதிப்புனல், ‘யாரடி நீ மோகினி’, ‘உத்தம வில்லன்’ உட்பட பல தமிழ்ப் படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவர் இயக்கிய படமான சங்கராபரணம்(1979), சாகர சங்கமம் (1983) ஆகிய படங்கள் 100 சிறந்த திரைப்படங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

திரைத்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக பத்மஸ்ரீ விருது, ஐந்துதேசிய விருதுகள், பிலிம் பேர் விருதுகள், 20க்கும் மேற்பட்ட நந்தி விருதுகள் உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.

இந்நிலையில், இந்திய திரையுலகின் உயரிய விருதாக கருதப்படுகிறது ‘தாதா சாகேப் பால்கே’ விருது. 2016-ம் ஆண்டுக்கான இந்த விருதை பழம்பெரும் இயக்குநர் கே.விஸ்வநாத்திற்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க