• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிம்லாவில் உதான் திட்டத்தை தொடங்கி வைத்தார் நரேந்திர மோடி

April 27, 2017 தண்டோரா குழு

சிறிய நகரங்களுக்கு இடையில் விமான சேவையை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட உதான் திட்டத்தை பிரதமர் மோடி சிம்லாவில் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

இமாசல பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற விழாவில் சிம்லாவிலிருந்து டெல்லிக்கு முதல் விமானப் பயணத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.அவர் சிம்லாவுக்கு செல்வது இதுவே முதல்முறை.

இத்திட்டத்தின் கீழ் 5௦௦ கிலோமீட்டர் தொலைவுக்கு உட்பட்ட விமான பயணங்களுக்கு 2,5௦௦ ரூபாய் வசூலிக்கப்படும். வரி மற்றும் சேவை கட்டணம் இல்லை. சிம்லாவிலிருந்து புதுதில்லிக்கு இயங்கவிருக்கும் ஏர் இந்திய நிறுவனத்தின் கிளை நிறுவனமான அலையன்ஸ் ஏர் விமான சேவையையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த விமானத்திற்கான கட்டணம் 2,3௦6 ஆகும்.

உதான் திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் பேசுகையில்,

“இந்தியாவில் ஹவாய் காலணிகளை அணியும் எளிய மக்கள் விமானத்தில் பயணிப்பதை பார்க்க விரும்புகிறேன்”

மேலும், உதான் திட்டத்தை பயன்ப்படுத்தி நீண்ட பயணம் மேற்கொள்பவர்களுக்கு விமான கட்டணம் அதிகமாக இருக்கும். இத்திட்டத்திற்கு கீழ், நாடெங்கும் உள்ள 7௦ விமான நிலையங்களுக்கு இடையே ஸ்பைஸ் ஜெட்,ஏர் ஒடிஷா,ஏர் டெக்கான்,ஏர் இந்தியா துணை நிறுவனமான விமான சேவைகள்
டர்போ மேகா ஆகிய 5 விமான நிறுவங்கள் சேவை செய்யும்.

5௦,௦௦௦ முதல் 1 லட்சம் மக்கள் தொகையை கொண்ட பிராந்திய நகரங்களில் இருந்து மெட்ரோ நகரங்களுக்கு இடையே இணைப்பை மேம்படுத்த 44 விமான நிலையங்களை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும் படிக்க