• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அகற்ற உயர்நீதி மன்றம் இடைக்கால தடை !!

April 28, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் சீமைக் கருவேலமரங்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.

உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. இதையடுத்து, சீமைக்கருவேல மரங்களை அகற்ற ஐ.ஐ.டி. நிபுணர் குழுவை அமைக்க கோரி வழக்கறிஞர் மேகநாதன் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் சீமைக் கருவேலமரங்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது. வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி மாற்றி ஐஐடி இயக்குநர் பதிலளிக்க தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மேலும், வழக்கை மே 11ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம் தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற மே 11 வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க