• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்க தடை மாநகராட்சி ஆணையாளர் உத்தரவு

May 4, 2017 தண்டோரா குழு

ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் உள்ள கோயம்புத்தூரில்,50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் கேரிபேக், பிளாஸ்டிக் டம்ளர், தட்டுகளை தயாரிக்க மற்றும் விற்க அனுமதி இல்லை என மாநகராட்சி ஆணையர் விஜய்கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் உள்ள கோவை மாநகராட்சியில் நாள்தோறும் 600 டன்னுக்கு மேல் சேரும் குப்பைகளில் பெரும்பாலும் மக்காத, மறுசுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் கழிவுகளே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களையே பயன்படுத்துகின்றனர்.

இதனை முற்றிலுமாக தவிர்த்து, இயற்கைக்கு கேடு விளைவிக்காத பொருள்களை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகளும் விழிப்புணர்வு நிகழ்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் முதற்கட்டமாக ராஜா தெரு,தாமஸ் தெருக்களில் உள்ள பிளாஸ்டிக் பை தயாரிப்பு நிலையங்களில் இருந்து சுமார் 5 டன் பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.மேலும், கோவை மாவட்டத்தின் இயற்கை வளம் பாழாகாமல் இருக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு கடந்த மே 1ஆம் தேதி முதல் நகரில் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால் உத்தரவினை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க