• Download mobile app
13 Dec 2025, SaturdayEdition - 3594
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கால்பந்து வீரர் மெஸ்ஸி மீதான தடை விலகியது

May 6, 2017 tamilsamayam.com

சூரிச் (சுவிட்சர்லாந்து): கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிக் கொள்வதாக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

உலகம் முழுதும் கால்பந்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நட்சத்திர நாயகன் மெஸ்ஸி, சூப்பர் ஸ்டார் டீகோ மரடோனா விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப வந்தவர் என புகழப்படுபவர். சில சமயங்களில் மரடோனாவை விட மெஸ்ஸி சிறந்த ஆட்டக்காரர் எனவும் அவர் புகழப்படுவதுண்டு.

இப்படி பல்வேறு சிறப்புகளை பெற்ற மெஸ்ஸி கடந்த மாதம் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான தகுதி சுற்றில் சிலி அணியை எதிர்த்து விளையாடினார். அப்போது நடுவர் எமர்சன் அகஸ்டோவை அவமதிக்கும் வகையில் மெஸ்ஸி பேசியதாக புகார் எழுந்தது.

இதையடுத்து பிஃபா அமைப்பு மெஸ்ஸிக்கு நான்கு போட்டிகளில் விளையாட தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து மெஸ்ஸியின் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி நான்கு போட்டிகளில் விளையாட விதிக்கப்பட்ட தடையை விலக்கிக் கொள்வதாக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க