• Download mobile app
25 Apr 2025, FridayEdition - 3362
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நீதிபதி கர்ணனை கைது செய்ய முடியாமல் சென்னை திரும்பும் போலீஸார்..!!

May 10, 2017 தண்டோரா குழு

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை வழங்கி செவ்வாய்க்கிழமை (நேற்று) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நீதிபதி கர்ணனை கைது செய்ய காவல்துறையினர் தயாராகி வருகின்றனர்.

இதற்கிடையே, சென்னை வந்த நீதிபதி கர்ணன் சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார்.

இதையடுத்து, கொல்கத்தா போலீஸார் சென்னை வந்திருந்தனர். கைது நடவடிக்கை தொடர்பாக மேற்குவங்க டிஜிபி, ஏடிஜிபி உள்ளிட்ட 4 பேர் சென்னை மாநகர காவல் ஆணையர் கரண் சின்ஹாவுடன் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில்,நீதிபதி கர்ணன் ஆந்திராவில் உள்ள காளஹஸ்தியில் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, முதலில் காளஹஸ்தி சென்றனர்.கொல்கத்தா போலீசாருடன், தமிழக காவல்துறையினரும் காளஹஸ்தி சென்றனர்.

ஆனால், கர்ணனின் தொலைபேசி தடா பகுதியில் இருப்பதாக காட்டியதையடுத்து தமிழக மற்றும் மேற்குவங்க காவல்துறையினர் தடா பகுதிக்குச் சென்றனர். அங்கு நடைபெற்ற சோதனையில் கர்ணன் இருப்பதற்கான தகவல் கிடைக்காததையடுத்து இருமாநில காவல்துறையினரும் சென்னை திரும்புகின்றனர்.

இதற்கிடையில், சென்னை சூளைமேட்டில் உள்ள கர்ணனின் மகன் வீட்டிலும் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.இந்திய நீதிமன்ற வரலாற்றிலேயே உயர் நீதிமன்ற நீதிபதி அளவில் இருக்கும் ஒருவருக்கு சிறை தண்டனை வழங்கப்படுவது இதுவே முதன் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க