• Download mobile app
25 Apr 2025, FridayEdition - 3362
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சீனாவில் மூதாட்டியை காப்பாற்ற ரயில் பெட்டியை கவிழ்த்த மக்கள்

May 13, 2017 தண்டோரா குழு

ரயிலிக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே உள்ள இடைவெளியில் சிக்கிய மூதாட்டியை காப்பாற்ற ரயில் பெட்டியை சாய்த்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனா நாட்டின் பெய்ஜிங்கில் அதிக கூட்டம் நிறைந்த ரயில் நிலையம் குவாங்ஷு ஆகும்.அந்த ரயில் நிலையத்திற்கு ஒரு ரயில் வந்துள்ளது. அதிலிருந்து இறங்கிய 72 வயது மூதாட்டி ஒருவர் ரயிலிக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே உள்ள இடைவெளியில் தவறி விழுந்துவிட்டார். அவர் விழுந்த இடத்தில் இருந்த ஒரு சிறிய இடைவெளியில் அவருடைய கால் சிக்கிக்கொண்டது.

அங்கிருந்த மக்கள் இதைக்கண்டதும் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த மூதாட்டிக்கு உதவ முன் வந்தனர். அவர் சிக்கியிருந்த இடைவெளியிலிருந்து வெளியே எடுக்க முயற்சி செய்தனர். ஆனால், அவரை வெளியே கொண்டு வர முடியவில்லை. 1௦௦ டன் எடையை கொண்ட ரயில் பெட்டியை பின்புறமாக தள்ளி அவரை விடுவிக்க திட்டமிட்டனர். அதன்படி, அனைவரும் ஒரு குழுவாக இணைந்து அந்த ரயிலை தள்ளியுள்ளனர்.

அவருடைய கால் சிக்கியிருந்த இடத்திலிருந்து காலை எளிதாக வெளியே எடுக்க உதவ, ரயில்வே ஊழியர்கள் அவருக்கு தைலம் ஒன்றை கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் அறிந்த ரயில்வே மீட்புப்பணி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கிருந்த மக்களின் உதவியுடன் அந்த மூதாட்டியை அந்த இடைவெளியில் இருந்து பத்திரமாக வெளியே கொண்டு வந்துள்ளனர்.

“எனக்கு பெரிய காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. முழங்கால்கள் சிறிய சிராய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளது. என்னை காப்பாற்ற உதவிய மக்களுக்கு என் மனமார்ந்த நன்றி” என்று அந்த மூதாட்டி தெரிவித்தார்.

மேலும் படிக்க