• Download mobile app
25 Apr 2025, FridayEdition - 3362
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அண்ணா பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவிற்கு தடையில்லை – உயர் நீதிமன்றம்

May 18, 2017 தண்டோரா குழு

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லாத நிலையில் பட்டமளிப்பு விழா நடத்தக் கூடாது என்று தடை கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழகத்தின் முக்கிய பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகம் தற்போது துணை வேந்தர் இல்லாமல் இயங்கி வருகிறது.இதனிடயே, அண்ணா பல்கலைக்கழகத்தின், 37-வது பட்டமளிப்பு விழா மே 19-ம் தேதி (நாளை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அண்ணா பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் துணை வேந்தர் இல்லாத நிலையில் அவருக்கு மாற்றாக வேறு ஒரு உயர் அதிகாரியைக் கொண்டு சான்றிதழில் கையெழுத்திட்டு பட்டமளிப்பு விழா நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு தடை விதிக்கக் கோரி அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அண்ணா பல்கலைக்கழகத்திடம் விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தது. யுஜிசி விதிகளின்படி துணைவேந்தர் கையெழுத்து இல்லாமல் சான்றிதழ் வழங்கப்பட கூடாது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் அண்ணா பல்கலைக்கழக சான்றிதழ் செல்லாது என்பதற்கு எந்த சான்றும் இல்லை என்றும் பல்கலைக்கழக விதிகளின் அடிப்படையில் பட்டமளிப்புக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், கையெழுத்து செல்லாது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி ஆசிரியர் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தும்,அண்ணா பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தும், திட்டமிட்டபடி விழா நடக்கும் எனவும் உத்தரவிட்டது.

மேலும் படிக்க