• Download mobile app
25 Apr 2025, FridayEdition - 3362
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பேஸ்புக் நிறுவனத்திற்கு ரூ.773 கோடி அபராதம்

May 19, 2017 தண்டோரா குழு

உலகின் பிரபல சமூக வலைத்தள நிறுவனமான பேஸ்புக் மீது ஐரோப்பிய ஒன்றியம் 11௦ மில்லியன் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

கடந்த 2௦14ம் ஆண்டு, தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ் ஆப்பை பேஸ்புக் நிறுவனம் வாங்கியது. அப்போது தவறான தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியதாக பேஸ்புக் நிறுவனம் மீது புகார் எழுந்தது.

இந்த புகார் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் நேற்று(மே 18) விசாரித்தது.இந்த விசாரணையின் முடிவில் பேஸ்புக் நிறுவனத்துக்கு 11௦ மில்லியன், இந்திய மதிப்பின் படி, 79௦ ரூபாய் அபராதம் விதித்தது.

“நிறுவனம் மற்றொரு நிறுவனத்தை வாங்கும்போது, அந்த நிறுவனம் அது குறித்து விவரமான, முக்கியமான தகவல்களை தெரிவித்திருக்க வேண்டும்” என்று ஐரோப்பிய ஒன்றிய தெரிவித்தது.

இது குறித்து பேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,

“ஐரோப்பிய ஒன்றியத்துக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் தந்துள்ளோம். இருப்பினும், கொடுக்கப்பட்ட தகவல்களில் சிறு தவறுகள் ஏற்பட்டது உண்மை தான். வேண்டுமென்றே அந்த தவறை நாங்கள் செய்யவில்லை. தெரியாமல் நடந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் அளித்த தீர்ப்பு குறித்து மேல் முறையீடு செய்ய பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க