• Download mobile app
25 Apr 2025, FridayEdition - 3362
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குடியரசு தலைவருக்கு ஈமெயில் அனுப்பினார் நீதிபதி கர்ணன்

May 19, 2017 தண்டோரா குழு

உச்சநீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 6 மாத சிறைத் தண்டனையை ரத்து செய்யக் கோரி, நீதிபதி கர்ணன் சார்பில் குடியரசு தலைவருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு உச்சநீதிமன்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாதம் சிறைத் தண்டனை விதித்தது. இதனால் அவரை கைது செய்ய கொல்கத்தா போலீசார் கடந்த சில நாட்களாகவே சென்னையில் முகாமிட்டுள்ளனர். ஆனால் அவர் தலைமறைவாக உள்ளதால் கைது செய்ய முடியவில்லை.

இதற்கிடையில்,தன் மீதான சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி கர்ணன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இதை அவசர வழக்காக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் மனுவை விசாரித்த நீதிமன்ற அமர்வு, அவசரமாக விசாரிக்க மறுப்பு தெரிவித்தது. மனு எப்போது விசாரணைக்கு வருகிறதோ, அப்போது எடுத்துக் கொள்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனால், அதிருப்தியடைந்துள்ள நீதிபதி கர்ணன், குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜியிடம் முறையிட இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நீதிபதி கர்ணன் சார்பில் வழக்கறிஞர்கள் நெடும்பரா, பிலிப் ஆகியோர் குடியரசு தலைவருக்கு ஈமெயில் அனுபியுள்ளதாக கூறப்படுகிறது.எனினும்,அத்தகைய தகவல் எதுவும் கிடைக்கவில்லை என குடியரசு தலைவர் அலுவலகம் கூறியுள்ளது.

மேலும் படிக்க