• Download mobile app
26 Apr 2025, SaturdayEdition - 3363
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆஸ்திரேலியாவிருந்து 1.49 கோடி மதிப்புள்ள சோழர் காலத்து சிலை மீட்பு

May 26, 2017 தண்டோரா குழு

தஞ்சாவூர் கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.1.49 கோடி மதிப்புள்ள சிலையை ஆஸ்திரேலியாவில் இருந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டு வந்துள்ளனர்.

சுமார் 1046 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் காலத்து நரசிம்மசிலையை விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் இருந்து 15 ஆண்டுகளுக்கு முன்பு சிலர் திருடி சென்றுள்ளனர்.

அமெரிக்கா வழியாக ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்டரூ.1.49 கோடி மதிப்புள்ள இந்த சிலையை ஐ.ஜி.,பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் ஆஸ்திரேலியா சென்று மீட்டனர்.

இதுக்குறித்து பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி., பிரதீப் பிலிப் கூறும்போது,

உலக சந்தையில் ஆயுதம் மற்றும் போதை பொருளுக்கு அடுத்ததாக கலை நுட்ப சிலைகளுக்கு அதிக மதிப்பு இருப்பதால் சிலை கடத்தல் தொடர்கிறது. இவற்றை தடுக்க தமிழக கோவில் சிலைகளை ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சோழர் கால சிலைகள் அதிகளவில் கடத்தப்படுகின்றன.இந்தியாவிற்கு பழமையான வரலாறு உண்டு. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் வரலாறுக்கு மதிப்பு அதிகம். இங்கு மக்களுக்கு பழமையான சிலை மதிப்பு தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், இந்த வழக்கிற்கும் சுபாஷ் கபூருக்கும் தொடர்பு கிடையாது. இந்த சிலையை கடத்தியது மும்பையை சேர்ந்த வல்லப பிரகாஷ் என்பவர். இவர் 2 நாளுக்கு முன் தான் விடுதலையானார். சிலை கடத்தல் வழக்கில் யாருக்கும் குண்டர் சட்டம் விதிக்கப்படவில்லை என ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் கூறினார்.

மேலும் படிக்க