• Download mobile app
29 Apr 2025, TuesdayEdition - 3366
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திருமுருகன்காந்தி மீது மீண்டும் வழக்குப்பதிவு

May 31, 2017 தண்டோரா குழு

குண்டர் சட்டத்தில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மே 17 இயக்கத்தை சார்ந்த திருமுருகன்காந்தி மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்நாட்டு போரின் போது தமிழர்கள் மிக கொடூரமாக கொல்லப்பட்டதை நினைவுப்படுத்தும் விதமாக கடந்த 21-ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் தடையை மீறி மே-17 இயக்கம் சார்பாக நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தை மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி நடத்தினார். சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த தடை இருப்பதால் போராட்டத்தில் ஈடுபட்டதால் திருமுருகன்காந்தி, டைசன், அருண்குமார், இளமாறன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள் 4 பேர் மீதும் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் புழல் சிறையில் உள்ள திருமுருகன் காந்தி தேனாம்பேட்டை ஐ.ஒ.சி அலுவலகத்தில் கல் வீசியது தொடர்பாக மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க