• Download mobile app
18 Apr 2025, FridayEdition - 3355
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியாவின் ஒரே ‘தல’ தோனி தான் : பிளமிங்!

June 2, 2017 tamilsamayam.com

முன்னாள் இந்திய கேப்டன் தோனி, வரும் 2019 உலகக்கோப்பை வரை விளையாட தகுதியுடன் உள்ளதாக முன்னாள் நியூசிலாந்து கேப்டன் ஸ்டீவன் பிளமிங் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கேப்டன் ‘தல’ தோனி. இவர் ஐ.சி.சி., யால் நடத்தப்படும் மூன்று விதமான உலகக்கோப்பைகளை (டி-20( 2007), ஒருநாள் (2011), சாம்பியன் டிராபி (2013)) வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனை படைத்தவர்.

இவர், தன் மீது எழுந்த கடுமையான விமர்சனங்கள் காரணமாக டெஸ்ட் போட்டியில் இருந்து கடந்த 2014 பாக்சிங் டே டெஸ்ட் உடன் ஓய்வு பெற்றார். பின் ஒருநாள், டி-20 போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.

இந்நிலையில் தற்போதும் தோனி மீது மோசமான பார்ம் காரணமாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது. அதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் அவர் தனது ஓய்வு முடிவை அறிவிக்கலாம் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அவர் வரும் 2019 உலககோப்பை வரை விளையாட தகுதியுடன் உள்ளதாக முன்னாள் நியூசிலாந்து அணி கேப்டன் ஸ்டீவன் பிளமிங் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க