• Download mobile app
29 Apr 2025, TuesdayEdition - 3366
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நான்கு பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி – தமிழக முதலமைச்சர்

June 2, 2017 தண்டோரா குழு

கோவை காட்டு யானை தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி அளித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

கோவையில் நேற்று இரவு போத்தனூர் அருகே கணேஷபுரம் பகுதியில் ஒற்றை காட்டு யானை நுழைந்தது. அது வீட்டுக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த விஜயகுமார் மற்றும் அவரின் மகள் காயத்ரியை (12) கடுமையாக தாக்கியது. இதில் சிறுமி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதன் பின் வெள்ளலூர் பகுதிக்குள் நுழைந்த அந்த யானை நாகரத்தினம், ஜோதிமணி ஆகிய இரு பெண்களை தாக்கி கொன்றது. அதே போல்தோட்டத்துக்கு நீர் பாய்ச்ச வந்த பழனிசாமி என்பவரையும் அந்த யானை தாக்கியது.அதில் அவர் அங்கேயே உயிரிழந்துவிட்டார்.

இச்சம்பவத்தில் இறந்த நான்கு பேரின் குடும்பத்திற்கும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறியுள்ளார். மேலும் அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி அளித்து உத்தரவிட்டுள்ளார். வனத்துறையினர் மூலம் இந்த நிதியுதவி உடனே அவர்களுக்கு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க