• Download mobile app
18 Apr 2025, FridayEdition - 3355
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மூன்றரை வயதில் இந்தியாவுக்கு பெருமை தேடி தந்த குட்டி தமிழச்சி

June 3, 2017 tamilsamayam.com

மூன்றரை வயதே ஆன சேலத்தை சேர்ந்த நேத்ரா என்ற சிறுமி சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் இரண்டு தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

சேலம், அம்மாபேட்டையைச் சேர்ந்தவர் நேத்ரா. துறு துறு என இருக்கும் நேத்ரா எப்போதும் கால்களில் ரெக்கை கட்டி பறந்து கொண்டு தான் இருப்பார். ஆம் ஸ்கேட்டிங் எனும் ரெக்கையை கட்டி பறப்பது நேத்ராவுக்கு மிகவும் பிடிக்கும்.

வெறும் மூனறை வயதாக இருந்தாலும், அவர் ஸ்கேட்டிங்கில் செய்யும் அட்டகாசம் மிகவும் அதிகம் தான். இவர் உள்ளூரில் நடந்த பல போட்டிகளில் கலக்கியிருந்தார்.

தற்போது தாய்லாந்தில் 6 வயதுக்குட்பட்டோருக்கான ஸ்கேட்டிங் போட்டி நடைப்பெற்று வருகின்றது. இதில் கலந்து கொண்ட நேத்ரா 500 மீட்டர் மற்றும் 1000 மீட்டர் பிரிவுகளில் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.

மேலும் படிக்க