• Download mobile app
29 Apr 2025, TuesdayEdition - 3366
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை அதிமுக தலைமை அலுவகத்தை முற்றுகையிட முயன்றோர் கைது

June 6, 2017 தண்டோரா குழு

மாட்டிறைச்சி விவகாரத்தில் கோவையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அடக்குமுறைக்கு எதிரான கூட்டமைப்பினர் 17 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருமுருகன் காந்தி மீது போடப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்.மாட்டிறைச்சி மீதான தடையை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை அதிமுக தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையை அடக்குமுறைக்கு எதிரான கூட்டமைப்பினர் முற்றுகையிட்டனர்.

இது குறித்து அவர்கள் கூறும்போது,

சென்னையில் இனப்படுகொலைக்கு எதிராக நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்ற திருமுருகன், இளமாறன், டைசன், அருண் ஆகியோர் கைது செய்யப்பட்டது. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஆகவே, அவர்கள் மீது போடப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற வேண்டும். மாட்டிறைச்சி மீதான தடையை நீக்க வேண்டும் என்றனர்.

இந்த முற்றுகை போராட்டத்தில் ஆதித்தமிழர் கட்சி மாநிலத் தலைவர் வெண்மணி உள்ளிட்ட 17 பேரை போலீசார் கைதுசெய்தனர். இந்தப் போராட்டம் காரணமாக அதிமுக தலைமை அலுவலகம் முன்பாக சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க