June 6, 2017
தண்டோரா குழு
தினகரனுக்கு எதிராக பேசிய அமைச்சர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்கத்தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
அதிமுக துணைப்பொதுசெயலாளர் டிடிவி தினகரனை அதிமுக எம்.எல்.ஏக்கள் பலர் இன்று சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்கத்தமிழ்ச்செல்வன்,
தமிழகத்தில் ஆட்சி கவிழ வாய்ப்பே இல்லை என்றும் அதிமுகவில் தினகரன் தலைமையில் மூன்றாவது அணி உருவாக வாய்ப்பில்லை என்றும் கூறினார். மேலும்,நிதி அமைச்சர் ஜெயக்குமார் மீதான நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.